Pages

திருவண்ணாமலை கிரிவலம் வருவோமா?

கிரிவலம் வருவோமா?


மலைமேல் இருந்து அருணாசலர் ஆலயம்
கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. கிரிவலம் பற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
திருமஞ்சன கோபுரம்
மலையின் பெருமை
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.
சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
- என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.
ராஜ கோபுரம்
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கிரிவலம்
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.
நந்திகேஸ்வரர்
மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது.  இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.
வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.
அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது.  எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.
அண்ணாமலை
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
நந்தி
அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.
ஆதி அண்ணாமலை
அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.
சிறப்பு விமான தரிசனம்
கிரிவலம் செல்லும் முறை
நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.
திரிமூர்த்தி தரிசனம்
மலை வலம் வர உகந்த நாட்கள்:
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.
கிரிவல மகிமை
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.
நந்தி முக தரிசனம்
சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள்  செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
பலன்கள்
ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே! -என்கிறது தேவாரமும்.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.
பூத நாராயணர்
ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்
திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.
வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.
நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.
மலை தரிசனம்
அருணாசல அருணாசல அருணாசல

ஆவிகள் உலகம் ஆவிகள் உண்டா?

ஆவிகள் உலகம்



ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.
ஆவிகள்மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.
ஆவிகள் உலகம்கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.
அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.
ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.
(தொடரும்)
அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல்ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நெருப்பை கையில் அள்ளும் வித்தை (Magic)

நெருப்பை கையில் அள்ளும் வித்தை


வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை 
தனது இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரீனால் சுடாது.
இதை பார்ப்பவர்கள் உனக்கு அக்கினி தம்பனமாகி விட்டதாக எண்ணுவார்கள்.

காளிக்கு பலி கொடுக்க மந்திரம்

காளிக்கு பலி கொடுக்க மந்திரம்


இன்று காளி எனும் தேவதைக்கு பலி கொடுக்கும் முறை ஒன்றினை பார்க்களாம்.

பொதுவாக பலி இடுதலில் ஈடுபாடும் விருப்பமும் இல்லாதவன் நான் அதிலும் உயிர் பலி இடுதலில் முற்றாக வெருப்பவன். ஆனால் குருமாரிடம் ஓர் கல்வியை பயிலும் போது அனைத்தையும் முளுமையாக கற்க வேண்டும் என்பதற்காக படித்து வைத்த சில விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பலியிடலின் சாரம் இதுதான், குறிப்பிட்ட தேவதைகளை உபாஷனை செய்யும் மாணவர்கள் அந்த தேவதைகளை தங்கள் வசம் அதிக ஈடுபட்டை காட்டவும் அதற்கு விரும்பிய உணவுகளை கொடுக்கவும் பயன்படுத்தும் முறைகளில் ஒன்றே இது.

இந்த மந்திரம் காளியை உபாஷனை செய்யும் எவரும் பயன்படுத்த முடியும், அத்துடன் காளியின் பல அவதாரங்களும் இந்த மந்திர முறையில் அடங்கும். அதுதவிர எந்த பலி பூசையும் செய்ய முடியும் ஆனால் அடியேனின் வேண்டுகோள் தயவு செய்து உயிர்களை பலியிட வேண்டாம். அதற்கு பதிலாக பழ வகை, தேன், சக்கரை பொங்கள் போன்றவற்றை பலியிட்டு பலனடையவும். அதுவே சிறந்த முறையுமாகும்.

பலியிடும் விதம் எப்படி என்பதை உங்கள் குருமாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

மந்திரம்

ஓம் காளி மாதங்கி றிங்ங வா சீக்கரம் வா ஆயி சூலி சிங்க வாகினி சீக்கரம் செண்டேறு செண்டேறு இசங்கு இசங்கு சாடு சாடு எட்டு காளி என்னடி அம்மே கூப்பிட்டால் ஓடி வா நரபலி உண்ணு மது மாங்கிச சக்தி மது பலி உண்ணு நரசிங்க ரூபி இரணிய சங்ஙாரி இரத்த பிடாரி வங்ங வங்ங வடுக பத்திரகாளி சீக்கரம் வா வா இந்தா பலி உண்ணு சுவாகா.

கிரிகை

பூசையின் நிறைவில் தேவையானவற்றை அக்கினியில் பலி இடலாம். மூன்று முறை மந்திரம் சொல்லி பின்னர் அக்கினியில் போடவும். 

வசியம் (Vasiyam)

வசியம்

வசியங்களின் வகைகள்

  • ஆண் வசியம்
  • பெண்  வசியம்
  • சத்ந  வசியம்
  • தொழில்  வசியம்
  • முக  வசியம்

ஆண் வசியம்

பெண்களிடம் சண்டையிடுதல்; மனைவியை விட்டு வேறு பெண்னணநாடுதல்; விவாகரத்து செய்தல்; மனைவியை தகாத முறையில் நடத்துதல்; மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக நடக்காமல் இருத்தல்; மனைவியின் நடந்தயில் சந்தேகம்; காதல் பிரச்சனை ; இவர்களுக்கு (புருஷ வசியம்) எனப்படும் ஆண் வசியம் செய்து   பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

பெண் வசியம்

ஆண்களிடம் சண்டையிடுதல்; விவாகரத்து செய்தல்; காதல் பிரச்சனைகள்; கணவனின் நடந்தயில் சந்தேகம்; கணவன்  மற்றும் குழந்தைகளிடம் அன்பு  செலுத்தாமல் இருத்தல்;  இது போன்ற  பிரச்சனைகளை பெண் வசியம் மூலம்  பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

சத்ந  வசியம்

எதிரிகளின் பொறாமை; துன்பம் விளைவித்தல்; சண்டையிடுதல்; கணவன் மனைவிக்குள் சண்டை; நண்பர்களுக்குள் சண்டைஉண்டாக்குதல் ; இவைகளை சத்ந வசியம் முலம் தீர்வு காண முடியும்.

தொழில் வசியம்

நஷ்டத்தில் உள்ள தொழில் ஸ்தாபனங்கள்; கடைகள்; அலுவலகம் முதலியவற்றினுள் உள்ள செய்வினைகளை கண்டறிந்து தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.; சக்திமிக்க யந்திரகளான ஸ்ரீ சக்கரம், காயத்ரி மஹா யந்திரம், அஷ்ட கன்ம யந்திரம்; சிதம்பர சக்கரம், அஷ்டலக்ஷ்மி யந்திரம், சாம்பவி யந்திரம், சடாசர யந்திரம், பஞ்ச பூத யந்திரம், நவகிரக யந்திரம், பஞ்சடாசர யந்திரம், கண் திருஷ்டி யந்திரம், அஷ்ட திக்க யந்திரம், நாற்பத்து முக்கோன சக்கரம் அஷ்ட பண்டன யந்திரம். இத்தகைய சக்திமிக்க யந்திரங்களால் தொழில் ஸ்தாபனங்கள், கடைகள்,அலுவலகம் முதலியவைகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்க வைக்க முடியும்.

முக வசியம்

அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் எதிரி மற்றும் போட்டியாளர்களின் நன் மதிப்பை கிடைக்கவும் அலுவலகத்தில் மேல்லதிகாரிகளின்  ஒத்துழைப்பு கிடைக்கவும் பைனான்ஸ் தொழில் மற்றும் அனைத்துவிதமான வியாபாரங்கள் சிறப்பாக நடக்க சக்தி மிக்க மூலிகை மை உதவும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகள் அடங்கிய மஹா மகத்துவம் பொருந்திய மூலிகைகள். 

Black Magic என்ற கறுப்பு மந்திரத்தால் ஏற்படும் விளைவுகள்:

தொழில்நஷ்டம், குடும்பத்தில் நிம்மதி இல்லைமை, கணவன் மனைவிபிரிவு, ஒற்றுமை இல்லாமை, உறவினர்களுடன் சண்டை, சொத்து தகராறு, தூக்கத்தில்  கெட்ட கனவுகள், செய்யும் வேலையை சரி வர செய்ய முடியாமல் போவது, நன்றாக  உள்ள தொழில் ஸ்தாபனங்கள் நஷ்டத்தில் இயங்குவது, வரவுக்கு மேல் செலவு,  ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாதது, தொழில் முடங்கி விடுவது, திருமணம்  கைகூடாமல் போவது, இன்னும் பல கெட்ட வேலைகளை (Black Magic) கறுப்பு  மந்திரத்தை பயன்படுத்தி நம் எதிராளிகள் நம்மை கடும் துன்பத்திற்கு ஆளாக்க  நேரிடும்.
By Hari Prasanth

மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவம்

சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்

மனித உடம்பில் உள்ள 72,000 நரம்பு மண்டலத்திலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளிலும் எதாவுது ஒரு கோளாறு ஏற்பட்டு முத்தோட உடம்பினால் ஆன பிண்டத்தில் 4448 வியாதிகளில் ஏற்படும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வியாதிகள் ஏற்படும்.  அவைகள்  சித்த மருத்துவத்தில் முழுமையாக தீர்க்க முடியும். சித்தர்களின் திருவாக்கினால் சொல்லப்பட்ட மூலிகைகள், பாஷைனங்கள், உபரசம் என்று சொல்லப்படும் உப்புகளாலும் பல அறிய மருந்துகள் உள்ளன.
"தழைபாந வேர்பாந தவரினாக்கால் மெல்ல பஸ்பம் செந்தூரம் பாரே" என்று கூறியுள்ளார்கள்.
இக்கால நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாஷானங்கள்  உப்புகள் சரியான தரமில்லாதவைகள். தவிர அவற்றை கொண்டு மருந்து செய்யும் சித்த மருத்துவர்கள் மிகக்குறைவு. சித்த மருத்துவத்தில் மிகத்தாமதமாக தான் நோய் குணமாகும் என்று ஒரு கருத்து உள்ளது. அது முற்றிலும் தவறு. மனித உடல் 67% தண்ணீரும் , 33% சதை, எலும்பு, தசைகளாலும்ஆனது. இதில் வாத உடல், பித்த உடல், கப உடல் என்று மூன்று வகை உள்ளது. அதை நாடி நடைகளால் கண்டறிய முடியும். பிறகு அந்தந்த நோய்க்கு தகுந்தால் போல் மருத்துவம் செய்தால் நோய் தீரும் என்பதில் ஐயமில்லை.   எங்களால் மூலிகை, வேர் கடை சரக்குகள் போன்றவற்றில் செய்த எராளமான மூலிகை மருத்துகளால் நோய்களை முற்றிலும் தீர்க்க இயலும்.
அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மூலிகை மருந்துகளை கொண்டு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

குழந்தையின்மை:


ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைவாக உள்ளதாலும், பெண்களுக்கு கருப்பையில் ஆறு விதமான பிரச்சனைகள் உள்ளதாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும். அவை: 
கணவன் மனைவி உடலுறவின் போது
  • கர்ப்பையில் பாசி பற்றி இருந்தால் தலைவலி உண்டாகும். 
  • வாயுவு நிறைதிருந்தால் உடல் வலிக்கும்
  • தசை வளர்த்திருந்தால் நெஞ்சில் தத்துவது போல் வலிக்கும். 
  • சோரி கட்டி (நீர் கட்டி) இருந்தால் கெண்டைகால் மற்றும் பாதம் வலி ஏற்படும்.
  • கர்பபைபயினுள் கொழுப்பு கூடியிருந்தால் ஏப்பம் அதிகம் இருக்கும். 
  • கிருமி அதிகம் இருந்தால் முதுகு வலி ஏற்படும்.
இவைகளை ஆண், பெண் இருவருக்கும் நாடி நடையை கண்டறிந்து சக்தி வாய்ந்த முலிகை  மருந்துகளால் குணப்படுத்தி புத்திர பாக்கியம் கிடைக்க செய்து வருகிறோம். இதுவரை  எங்களது ஆஸ்ரமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலன் அடைந்து உள்ளனர்.
by
Hari Prasanth

கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்:

கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்:








கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.