Pages

அஷ்ட கர்ம சித்திகள் என்றால் என்ன


அஷ்ட கர்ம சித்திகள்

அஷ்ட கருமம் என்றால் என்ன ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.


1.வசியம் :

நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.

2.மோகனம் :

நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .

3 .ஆக்ருஷனம் : 

எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.

4 . ஸ்தம்பனம் : 

தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

5. பேதனம் : 

கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

6 . வித்வேஷனம் : 

ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

7 . உச்சாடனம் : 

எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

8 . மாரணம் : 

மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .