யந்திரம் மாந்திரீகத்தில் இயந்திரம் மந்திரங்களை சேமித்து வைக்கவும் செயல்படுத்தவும் மாந்திரீகத்தில் யந்திரங்கம் பலவகைகளில் செயல்படகிறது. மாந்திரிகத்தில் மந்திரம் உயிராகவும் யந்திரம் உடலாவும் செயல்படுகிறது. சில ரகசிய மந்திர எழுத்துக்களையும் ரகசிய குறியீடுகளையும் சக்கரங்களில் அடைத்து அதற்குரிய மந்திரங்களை உருவேற்று உயிர்கொடுத்து மந்திர சக்தியால் செயல்படுத்தப்படுகிறது.
கோவில்களில் இருக்கும் சிலைகளுக்கு அடியில் அந்த தெய்வங்களுக்கு உண்டான யந்திரங்களை ஸ்தாபனம் செய்யப்படுகிறது. அங்கு சொல்லப்படும் மந்திரங்கள் அந்த யந்திரங்களில் பதிந்து சிலையின் மூலமாக அந்த தெய்வ சிலைகளுக்கு பரவி சிலைகளுக்கு உயிர் சக்தியும் தெய்வ சக்தியும் உண்டாகிறது. இதேபோல் பல காரியங்களுக்காகவும் யந்திரங்களை பிரயோகம் செய்யப்படுகிறது.


இக்காலத்தில் யந்திரங்களை பனை ஓலைகளில் வரைந்து வந்தார்கள். பின் மரப்பட்டைகளிலும் மரப்பலகைகளிலும் வரைந்து பிரயோகம் செய்தனர். பின்னர் சித்தா;கள் ரசவாத முறையில் தெய்வ ரசதகட்டில் யந்திரங்களை எழுதி பயன்படுத்தி வந்தனர். தேலும் பட்டு வஸ்திமைும் சில மிருகங்களின் தோலிலும் யந்திரங்கள் வரையப்பட்டது.இன்னும் யந்திரங்கள் தண்ணீரிலும் விபூதி மஞ்சள் குங்குமம் தேன் அஷ்டகந்தம் பன்னீர் குங்குமப்பூ சந்தனம் ரத்தம் பசும்சாணம் பசுபால் வெண்ணை கொழுப்பு இவற்றிலும் வரையப்படுகிறது.
மேலும் சுடுகாட்டு சாம்பால் மாயன மண் மண்டை ஓட்டில் வரையும் யந்திரங்களும் உண்டு இப்படி பலவித மந்திர காரியங்களுக்காக யந்திரங்கள் பலவகைகளிலும் பயன் படுத்தப்பட்டது பின்னர் உலேகங்கள் பயன்படுத்தப்பட்டன.
தங்கத் தட்டில் வரையப்படும் சக்கரங்கள் அதிக சக்தியுடன்முழுவதும் செயல்படும். இதில் சகல தெய்வ வசியம் தெய்வ மோகனம் வியாபார தொழில் வசியம் உண்டாகும்.
தொடரும் ........