ஜோதிட
உலகில் பரிகார சாஸ்த்திரத்தை முழுமையாக அறிந்தவர்களுக்கு சுதர்ம கிரியை என்பது
மிகமிக பரிச்சயமான வார்த்தை. ஜோதிடம், மருத்துவம்,
யோக தத்துவம் ஆகிய
மூன்றும் இணைந்த ரக்ஷ சாஸ்த்திரமே சுதர்ம கிரியை என்று சொல்லப்படுகிறது.
ஜோதிட
சாஸ்த்திரத்தால் தீர்க்கமுடியாத
பல பிரச்சனைகளுக்கு சுதர்ம கிரியை மூலம் நிரந்தர தீர்வுகள் பெறப்பட்டிருக்கின்றன.,உதாரணமாக
நீண்ட நாளாக உடல் நல குறைகளாலும் தீராத
நோய்களாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களுக்கு யாரோ மருந்து வைத்து
விட்டார்கள் என்றும், செய்வினை
வைத்து விட்டார்கள் என்றும் சொல்வதுண்டு. அதே போல சந்தோஷமாக இருக்கும்
குடும்பங்களில் திடீரென்று பிரச்சனைகளோ வேறு பெண்களோடு தொடர்புகளோ ஏற்பட்டால் யாரோ
மருந்து வைத்து விட்டார்கள் என்றும் செய்வினை வைத்து விட்டார்கள் என்றும் வசியம்
வைத்து விட்டார்கள் என்றும் சொல்லுவதை கேட்டிருக்கிறோம்.
இவ்வாறு
மருந்துவைத்தல் என்பதை ஜோதிட சாஸ்த்திரத்தில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை சொல்ல தெரியாத பல ஜோதிடர்கள் குருட்டாம்
போக்கில் யாரோ செய்வினை வைத்து விட்டார்கள் என்று சொன்னாலும்,
ஜோதிட
சாஸ்த்திரத்தில் விஷ போஜனம்
எனப்படும் மருந்து வைத்தலை கண்டுபிடிப்பதற்கென்றே சிலகணக்கீடுகள் இருக்க்ன்றன.
ஆருட
சக்கரத்தில் ஆறாம்
பாவம் என்பது
திருடர்கள்,எதிரிகள்,அசுத்தி
மற்றும் செய்வினை தோஷங்களை குறிக்கும். இதை பொதுவாக சத்ரு
தோஷம் அல்லது அபிசார
ப்ரயோகம் என்று
சொல்வதுண்டு.
இந்த
ஆறாம் இடத்துக்குறிய கிரகம் பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது பாதகாதிபதி ஆறாம்
இடத்தில் இருந்தாலோ அல்லது இந்த இரெண்டு கிரகங்களும் சேர்ந்து இருந்தாலோ இந்த
இரெண்டு கிரகங்களும் அறாம் இடத்தை பார்த்தாலோ எதிரிகளால்
செய்வினை தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.
பொதுவாக
ஆறாம் இடத்துக்குரிய கிரஹம் நிற்பது
அல்லது சேர்வது எந்த வீடோ அது சம்பந்த்தமான நபர்களால் செய்வினை பாதிப்பு
ஏற்பட்டிருக்கும் என்பது பொது விதி.ஆறுக்குடையவன் இரெண்டாம் இடத்தில் இருந்தால்
சொந்த குடும்பதினராலும், மூன்றாம்
இடத்தில் இருந்தால் சகோதர வழி அல்லது ஊழியர்களாலும், நான்கு
அல்லது ஐந்தில் இருந்தால் வாரிசுகளாலும்,ஏழில்
இருந்தால் மனைவி
அல்லது மனைவி வழியினராலும், பணிரெண்டில்
இருந்தால் மாற்று தொடர்புடைய ஆண் அல்லது பெண்களாலும் செய்வினை
பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று பொருளாகும்.
இதில்
செவ்வாயின் பார்வை இருந்தால் பாதிப்புகள் கடுமையாகவும், பலமாகவும், உக்கிரமாகவும் இருக்கும்
என்றும், சனியின்
பார்வை இருந்தால் நீண்டகாலமாகவும்,தீர்வுகள்
பலன் அளிக்காத வகையிலும் இருக்கும் என்று ப்ரசன்ன ஆரூடம் சொல்கிறது.
இது
ஜோதிடம் மற்றும் கிரக நிலைகளைக்கொண்டு செய்வினை ப்ரச்சனைகளை கண்டுபிடிக்கும்
முறையாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
இது
ஒருபுறமிருக்க.....
செய்வினை
பாதிப்புகளை கண்டுபிடிக்க பாரம்பர்ய மருத்துவ சாஸ்த்திரம்
சில வழிகளை சொல்லி இருக்கிறது........
பொதுவாக
விஷ போஜனம் எனப்படும் நச்சு பொருட்க்கள் கொடுக்கப் பட்டிருந்தால் கொடுக்கப்பட்ட
நச்சு பொருட்க்களின் தண்மைக்கு தக்கவாறு உடலில் மாற்றங்கள் (visible
symptoms) தெரியும். உதாரண்மாக, நச்சுத்தண்மை
கொண்ட நீர் தாவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உடலில்
பூஞ்சை பிடித்தாற் போல வெண்மை படர்ந்திருக்கும், வ்யர்வையில்
புகை நற்றமடிக்கும், வாயின்
ஓரங்களில் அடிக்கடி எச்சில் படியும், கன்ன
எலும்புகள் துருத்திக்கொண்டு கண்களுக்கு கீழே கருமை படியும். உலோக
நச்சுக்கள் அதிகம் கொடுக்கப்பட்டிருந்தால்
கண்களில் சாம்பல் பூத்திருக்கும் வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வாயு
னிறைந்திருப்பது போல் உணர்விருக்கும், சருமத்தில்
திடீர் திடீரென சிறு
சிறு வெடிப்புகள் தோன்றும், எச்சில்
கசப்பு அல்லது புளிப்பு சுவையுடன் இருக்கும். விஷதன்மை கொண்ட பூச்சிக்கள்
கொடுக்கப்பட்டிருந்தால் வயிரு உப்பி இருக்கும், பசி
எடுக்காது, வியர்வையில்
மாமிச வாடை அல்லது அழுகல்
வாடை அடிக்கும், விலா
பகுதியில் குத்தல் இருக்கும், எச்சில்
அதிகம் சுரக்கும்.
செய்வினை
பாதிப்பு அல்லது விஷபோஜன பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரின்
வலது கை மோதிரவிரலில் இருந்து ஒன்பது சொட்டு ரத்தம் எடுத்து அத்துடன் இந்துப்பு, கோஸ்டம், கல்மதம்
மற்றும் புங்க எண்னை இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து ஏற்படும்
மாற்றத்தை கொண்டு அறியலாம். அடுத்ததாக பாதிக்கப்பட்டவர் காலையில் எழுந்தவுடன் பல்
துலக்கு முன்பாக பத்து கிராம் கைக்குத்தல் அரிசியை வாயில் மூன்று நிமிடம் அடக்கி
வைத்து ஒரு வெள்ளை துனியில் பரப்பி காயவைத்து குடசப்பாலை மற்றும்
திருநீற்று பச்சிலையும் குறிப்பிட்ட அளவில் கலந்த வடி நீரும் நாய்
கடுகு எண்னையும் கலந்த கரைசலில் ஊறவைக்க அரிசியின் நிறம் மற்றும் அளவு மாறுவதை
பொருத்து பாதிப்புகளை கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக
விஷ போஜனத்திற்க்காக விஷ்தன்மை வாய்ந்த மூலிகைகளும், பூச்சிக்களும்
உலோக கலவைகளும் பயன் படுத்தப்படுவதால் இவற்றிலுள்ள நச்சுத்தண்மை நச்சுஉணவு
அல்லது போதை பொருள் என்ற வகையில் சேர்வதால் சாதாரண ஆய்வக சோதனைகளில்
தெரிவதில்லை.
இதைத்தவிர ஆழ்மன
சோதனை என்ற pro
hypno therapy முறைகளும் விஷ போஜனத்தை கண்டு
பிடிப்பதற்காக பின்பற்றப்படுகின்றன. இது ஒரு மனோவசிய முறையாகும் இதில்
பாதிப்புகளையும், பாதிப்புகளால்
ஏற்படும் பின் விளைவுகளையும் மிக சரியாக கண்டு பிடிக்க முடியும். பாதிக்கப்பட்டவரை ட்ரான்ஸ்
எனப்படும் யோக நித்திரையில் ஆழ்த்தி அவருடைய ஆழ்மன பதிவுகளையும் சக்ரங்களின்
சமனிலையையும் ஆய்வு செய்வதும். குருனாடி எனப்படும் ப்ரம்ம நாடியின் துடிப்பை
கவனிப்பதின் மூலமும் பாதிப்பின் தாக்கம், கால
அளவு,பின் விளைவுகள், தொடர்
விளைவுகள் ஆகியவற்றை மிகமிக தெளிவாக கண்டுபிடிக்க முடியும்.
ஒருவருக்கு
விஷபோஜனம் எனப்படும் இடுமருந்து வைக்கப்படுள்ளதாக சந்தேகம் இருந்தால் இந்த மூன்று
வழிகளில் மட்டுமே தெளிவாகவும் முறையாகவும் கண்டுபிடிக்க முடியும். அதிலும் முதல்
முறையான ஆரூடம் மூலம் கண்டு பிடிப்பது என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது.
இதற்க்கு அறிவியல் விளக்கமோ அடிப்படை
சாத்தியகூறுகளோ கிடையாது.
இதில்
கைகால் செயலிழப்பு, வலிப்பு
நோய், பக்கவாதம்,உடல்
வலி, தீராத
வயிற்று
வலி, நரம்பு
தளர்ச்சி, ஆறாத புண்கள், கட்டிகள்
போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தால் ரத்தம் மற்றும் உமிழ்நீர்
சோதனைகளாலும் ஹலுசினேஷன்,பை
போலர் அல்லது யுனிபோலர் மேனியா,அப்செசிவ்
கம்பல்சிவ் டிஸ ஆர்டர் போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தால் ப்ரோ
ஹிப்னோ தெரபி எனப்படும்
ஆழ்நிலை தூக்கத்தின் மூலமாகவும்
கண்டுபிடிக்கலாம்