Pages

ஐயப்ப சாமிகள் ஏன் மாமிசம் உண்ணக்கூடாது?




கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது பெருவாரியான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒருமண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து தனது குறைகளை தீர்க்கவேண்டி ஐயப்பனை காண எழில்மிகுந்த பச்சை வண்ணம் போர்த்திய உயர்ந்த மரங்களையும் ,விலங்குகளையும் கடந்து காட்டு வழி பாதையில் ஐயன் துணையுடன் சபரி மலைக்கு செல்கின்றனர். மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் நிச்சயம் ஒருமண்டலம் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து, அந்த விரதத்திற்கான விதிமுறைகளை சரியான படி கடைபிடிக்கவேண்டும் என நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். இவையெல்லாம் எதற்காக என நாம் ஆராயப்  போனால் பல பல அர்த்தமுள்ள விஷயங்கள் நமக்கு தெரியவரும். சபரிமலை விரதத்தின் நோக்கங்களை பார்ப்போம்.

01. 
இந்த ஐயப்ப விரதத்தின் 48 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் என்பது நமது உடலையும், உள்ளத்தையும் மிகவும் ஆரோக்கியமாகவும் நல்ல சிந்தனையுடன் வைத்திருக்கவும் இவை உதவுகின்றது. அதிலும் ஆண்கள் அதிகளவு மனக்கட்டுபாடு இல்லாமல் தங்களது உடலினை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே தான் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த  விரதம்.
02. விரத காலங்களில் பக்தர்கள் அணியும் துளசி மாலை அல்லது ருத்திராட்ச மாலை இவைகளில் அதிக அளவிலான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி மாலை அணிவதால் நமக்கு விரத காலங்களில் சளிப்பிடிக்காது மேலும் நமது வேர்வை துவாரங்கள் மூலம் சென்று நமது உடலினை பொலிவுடன் வைக்கின்றது. ருத்திராட்ச மாலை அணிவதால் நமது இதயமானது சீராக இயங்குகின்றது. மேலும் இரத்த ஓட்டத்தை சீர்செய்கின்றது.

03. 
இந்த விரத காலத்தில் மாமிச உணவுகள், அதிகமான கார உணவுகள்  மற்றும் வாசனை பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற விதிமுறை உண்டு. ஒரு மண்டலம் இவற்றை விடுத்து இருப்பதன் மூலம் நமது உடலில் உள்ள அதிகபடியான  கொழுப்புச் சத்துகள் கரைந்து  இரத்த அழுத்தம் சீராகி இதயம் நல்ல நிலையில் செயல்படும். மேலும் ஒரு காரணம் சபரிமலை யாத்திரையின் போது நாம் விலங்குகள் நிறைந்த  காட்டு வழியில்  செல்ல வேண்டியிருப்பதால் நாம் மாமிசம் உண்டிருந்தால் அது கடின காட்டு  வழியில் செல்லும் போது நமது வேர்வையில் மாமிச வாடை வெளிப்படும். இவ்வாடையின் மூலம் விலங்குகள் அதனை முகர்ந்து வந்து  நம்மை தாக்கலாம். இதனை கருத்தில் கொண்டு விரத காலத்தில் மாமிசத்தை தவிர்த்தனர்.

04. 
கார வகை உணவுகள்  மற்றும் மாமிச உணவுகள் உண்பதின் மூலம் உணர்ச்சிகள் அதிக அளவில் தூண்டப்படும் இதனால் காம உணர்வு மேலோங்கும் இதனை கட்டுபடுத்தவே  கார உணவுகளை தவிர்த்தனர்..

விரத காலங்களில் விந்தணு வெளியேற்றம் கூடாது. ஏனெனில் இந்த விரத காலங்களில் கட்டுபாட்டுடன் இருந்து சக்தியினை சேகரிப்பதன்  மூலம் காடு,மலை வழி பயணத்தின் போது நமக்கு உடலில் போதுமான சக்தி கிடைக்கும்.

05. 
ஐயப்ப  பக்தர்கள் இரு வேளை  குளிர்ந்த  நீரில் தான் குளிக்கவேண்டும் என்ற விதிமுறையுண்டு. இதன் காரணம் நாம் சபரிமலை பயணத்தின் போது பல இடங்களில் குளிக்க நேரிடும் மற்றும் பல தட்பவெப்ப பகுதிகளை கடக்கநேரிடும்  அதன் போது ஏற்படும் குளிரையும் குளிர் காற்றையும் நமது உடல் தாங்கும் வண்ணமே இவை ஏற்டுத்தப்பட்டது. மேலும் இருவேளை குளிர்ந்த நீரில் நீராடுவதால் காமமானது ஏற்படாமல் கட்டுபட்டிருக்கும்.

06. 
ஐயப்ப பக்தர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது ஏனெனில் செருப்பு அணியாமல் 48 நாட்கள் விரதமிருந்தால் தான் சபரிமலை பயணத்தின் போது காடு மற்றும் மலைகளில் உள்ள கற்கள்,முட்களை  கடக்கும் போது எளிதாக இருக்கும். அக்குப்பஞ்சர் முறையில் காடு மற்றும் மலைகளை வெறும் காலில் கடக்கும் போது அது உடலுக்கு பலவகையில் நன்மை புரிவதாக  அக்குப்பஞ்சர் மருத்துவம் தெரிவிக்கின்றது. 

07. 
நமது தலையில் இருமுடி சுமப்பதின் நோக்கம் நமது தலை பகுதியில் உள்ள  உள்ள சக்தி மையங்களை இயக்குவதன் மூலம் நமது உடலானது முழுஆரோகியத்தை பெரும். இந்த முறையானது அக்குப்பஞ்சர் மருத்துவத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இதைதான் நம்முடை முன்னோர்கள் தெய்வ வழிப்பாட்டு முறையின் மூலம் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

08. 
ஐயப்ப பக்தர்கள் விரத காலங்களில் தலைமுடி மற்றும் தாடி போன்றவற்றை  மழிப்பதில்லை. ஏனெனில் மலை பயணத்தின் போது ஏற்படும் பனி மற்றும் குளிர் காற்றினை தாங்கும் வகையிலும் மற்றும் தலையில் உள்ள இருமுடியின் பாரத்தினை தாங்கவும் தான் இந்த முன்னேற்பாடு.

09. 
விரத காலமான 48 நாட்களில் ஏற்படும் பிறப்பு  மற்றும் இறப்பு நிகழ்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது. இவை நமது மனதினை பெருமளவு பாதிக்கும் என்ற காரணத்தினால் ஏற்படுத்தப்பட்டது. இன்ப,துன்பங்களை மனிதன் சமமாக எண்ணி தாங்கும் விதமாக இவை ஏற்படுத்தப்பட்டது. பெண்களின் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியிருத்தல் வேண்டும். மாதவிடாய் காலங்களில் அவர்களின் உடலில்  இருந்து வெளிப்படும் திரவமானது (ரஜஸ்) கெடுதலை விளைவிக்க கூடியது எனவே அதிலிருந்து பாதுகாத்துகொள்ளவே  இவ்வாறு செய்யப்படுகிறது. 

10. 
இந்த விரதமானது நம்மிடையே உள்ள ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் மற்றும் ஜாதிமத  பேதங்களை களையும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. இதனை உணர்த்தவே சபரி மலை பயணத்தின் போது முதல் தரிசனமே வாபர் வழிபாடு. இங்கு வாபர்  மசூதியினை வணங்கிய பின்னரே ஐயப்பனை காணுவதற்கான பயணம் தொடங்கும். யப்பனின் தோழனான வாபருக்கு சபரிமலை 18-ம்  படிக்கு கிழக்கு பகுதியில் வாபரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

11. 
விரத காலங்களில் புகைப்பிடிப்பது, வெற்றிலை பாக்கு  மது அருந்துதல்  மற்றும் மாது போன்ற மனிதனை சீரழிக்கும் செயல்களை நிறுத்தும் விதமாக இக்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.