விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள்.
விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக
எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால்...தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல்
இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால்
இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி
சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும்
தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச்
சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன